செய்திகள்
பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10.25 கோடியாக உயர்வு

Published On 2020-10-25 07:14 GMT   |   Update On 2020-10-25 07:14 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.40 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78.64 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 70.78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 10.25 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 10,25,23,469 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,40,905 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News