செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-26 09:33 GMT   |   Update On 2021-10-26 10:44 GMT
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:

கோவில் நகைகளை தமிழக அரசு உருக்கி தங்க கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கிற திட்டத்தை கைவிடக் கோரி இந்து முன்னணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

துணைத்தலைவர் கிஷோர் குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News