ஆன்மிகம்
துர்க்கை

துர்க்கை விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்

Published On 2019-07-15 07:42 GMT   |   Update On 2019-07-15 07:42 GMT
துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும்.
துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். அனைத்து வகையான திருஷ்டி தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

துர்க்கை சக்தி வடிவான தெய்வம் ஆவார். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய தினங்களாக வாரத்தில் வருகின்ற செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன. அதோடு மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் தங்களின் குறைகள் தீர அம்மனுக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் பலன்கள் விரைவாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும்.

ஆடி மாதம் பெண் தெய்வ விரத வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த மாதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மாதத்தில் வருகின்ற அனைத்து தினங்களும் சக்தி வழிபாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றன. எனவே ஆடி மாதத்தில் துர்க்கையம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழா காலம் மகிஷாசுரமர்த்தினி என்கிற வடிவம் தரித்த துர்க்கையம்மனை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான காலகட்டமாகும். இக்காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து, விரதங்கள் மேற்கொண்டு வழிபடுவர்களுக்கு நன்மையான பலன்கள் தொடர்ந்து ஏற்படும்.
Tags:    

Similar News