செய்திகள்
கொள்ளை

தர்மபுரி அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2019-07-18 13:54 GMT   |   Update On 2019-07-18 13:54 GMT
தர்மபுரி அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி

தர்மபுரி நேருநகரை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது41) இவர் அரூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ந் தேதி சென்னை சென்றார். 

இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து 24 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள்,40 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து கஸ்தூரியிடம் போனில் தகவல் தெரிவித்தனர். அவர் நேரில் வந்து அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News