செய்திகள்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்பட வட மாநிலங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்...புதுவகை இணையவழி மோசடி: செல்போனுக்கு வரும் எந்த ‘லிங்கை’யும் திறக்க வேண்டாம்