உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று கலெக்டர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருகிற 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத் தும் மூடப்படும்.
அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.