செய்திகள்
குன்னத்தூரில் மர்மமாக நின்ற காரால் பரபரப்பு
நின்று கொண்டிருந்த காருடன் கர்நாடக பதிவெண் கொண்ட காரும் சுற்றி கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் மெயின்ரோட்டில் நேற்று முதல் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதனை எடுத்து செல்ல யாரும் வரவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பதிவெண் மூலம் அந்த கார் யாருடையது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழுதாகியதன் காரணமாக யாராவது காரை நிறுத்தி சென்றார்களா? அல்லது மர்மநபர்கள் யாராவது காரை கடத்தி வந்து நிறுத்தி விட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நின்று கொண்டிருந்த காருடன் கர்நாடக பதிவெண் கொண்ட காரும் சுற்றி கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.