செய்திகள்
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.
இதையடுத்து தெலுங்கானா மாநில ஆளுநராக செப்டம் 8ம் தேதி பத்வியேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்தவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீரென சந்தித்தார்.