செய்திகள்
அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

மீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2019-11-11 06:33 GMT   |   Update On 2019-11-11 06:55 GMT
மீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள சோமஞ்சேரி கிராம மக்களுக்கு ஆலோடு பகுதியில் இருந்து பைப் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக சோமஞ்சேரி கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் வினியோகிப்படும் நீரும் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பொன்னேரி- தத்தை மஞ்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News