செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரியில் 10-ம் கட்ட முகாம்: ஒரே நாளில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி

Published On 2021-11-23 12:23 GMT   |   Update On 2021-11-23 12:23 GMT
நீலகிரியில் 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 256 நிலையான மையங்கள் மற்றும் 20 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 220 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 434 பேர் என 654 பேருக்கு செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 45 வயதுக்கு மேல் 6 ஆயிரத்து 695 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 6,412 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேருக்கு போடப்பட்டது. 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News