உள்ளூர் செய்திகள்
கோடை மழையால் தக்காளி விலை வீழ்ச்சி- ரோட்டில் கொட்டும் அவலம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சுற்றி உள்ள பல கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சுற்றி உள்ள பல கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக.அனைத்து பகுதியிலும் தண்ணீர் தேங்கி தக்காளி அழுகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளிகள் காட்டுப் பகுதிகளிலும் ரோட்டோரங்களிலும் விவசாயிகளால் கொட்டப்பட்டு வருகிறது.