ஆன்மிகம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவில்

ஸ்ரீபுரம் தங்கக்கோவில் இன்று முதல் திறப்பு

Published On 2020-09-17 05:44 GMT   |   Update On 2020-09-17 05:44 GMT
ஸ்ரீபுரம் தங்கக்கோவில் இன்று (வியாழக்கிழமை) பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் பொதுதரிசனம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் :

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பக்தர்களின் தரிசனத்திற்காக தங்ககோவில் திறக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் பொதுதரிசனம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலை 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், இரவு 8 மணிக்கும் பக்தர்கள் பொதுதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பிறகு கோவில் நடைமூடப்படும். இடைப்பட்ட நேரங்களில் சுற்றுப்புற பராமரிப்பு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும். சேவா தரிசனம்செய்ய விரும்பும் பக்தர்கள், மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கோவில் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News