செய்திகள்
கோப்புப்படம்

தஞ்சையில் மீண்டும் துயரம்- மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Published On 2021-01-13 09:27 GMT   |   Update On 2021-01-13 09:27 GMT
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
தஞ்சை:

தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் வயலில் வேலை பார்த்த சகோதர்கள் தினேஷ் (12) கௌதம் (10) ஆகிய 2 பேர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தனர். இதில் 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.

ஏற்கனவே தஞ்சை வரகூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் இறந்த நிலையில் அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Tags:    

Similar News