செய்திகள்
தாக்குதல்

ஆண்டிப்பட்டி அருகே சொத்து பிரச்சினையில் மகளை தாக்கிய தாய்

Published On 2019-11-04 11:44 GMT   |   Update On 2019-11-04 11:44 GMT
ஆண்டிப்பட்டி அருகே சொத்துப்பிரச்சினையில் மகளை தாக்கிய தாய் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் வெற்றிச் செல்வி (வயது 35). தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

வெற்றிச்செல்விக்கும் அவரது தாய் கச்சம்மாளுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கச்சம்மாள் மற்றும் அவரது மற்றொரு மகள் விஜயலெட்சுமி ஆகியோர் வெற்றி செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்தவர் ராமன் (55). இவரது மகள் சின்னமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இருவரும் பிரிந்து வாழும் நிலையில் மகனின் பொருட்களை எடுக்க பாலமுருகன் வீட்டுக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.

வீடு பூட்டி இருந்ததால் பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது உறவினர் சொக்கன் ஆகியோர் ராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News