செய்திகள்
விடுதி

பணிபுரியும் பெண்கள் விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம்

Published On 2021-06-18 06:59 GMT   |   Update On 2021-06-18 06:59 GMT
உணவு, மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் பகிர்ந்தளிக்கும் முறையில் பெறப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி நெருப்பெரிச்சலில் செயல்பட உள்ளது. இந்த விடுதியில் சேர விருப்பமுள்ள மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு   குறைவாக உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 50 நபர்கள் தங்கலாம். 

அறை வாடகையாக மாதம் ரூ.400  நிர்ணயிக்கப்படும். உணவு, மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் பகிர்ந்தளிக்கும் முறையில் பெறப்படும். திரும்ப வழங்கப்படும் டிபாசிட் தொகையாக ரூ.2ஆயிரம் செலுத்த வேண்டும்.

அனுமதி நுழைவு கட்டணமாக  ரூ.10 வசூலிக்கப்படும். விடுதியை ஒப்பந்த முறையில் நடத்தவோ, விடுதியில் தங்கவோ விரும்புவோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம். 

மேலும் விவரங்களுக்கு, 0421 2971168 என்ற எண்ணில் வேலை நேரத்தில் தொடர்புகொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News