செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 773 பேர் பாதிப்பு

Published On 2021-06-09 15:42 GMT   |   Update On 2021-06-09 15:42 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 773 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 773 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 996- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,119- ஆக உயர்ந்தது. இதில் 5,987 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 589- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,064- ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 558 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News