வழிபாடு
மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2021-12-30 03:14 GMT   |   Update On 2021-12-30 03:14 GMT
நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலில் மீன் வளம் பெருக வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

இதன்படி இந்த ஆண்டுக்கான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து பெண்கள் பூஜித்தனர். முன்னதாக மகா காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சாமிக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் மீனவ கிராமத்தை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News