செய்திகள்
தேனி அருகே மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அம்மச்சியாபுரத்தில் மதுவிற்ற அதே ஊரை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 32), டி.ராஜகோபாலன்பட்டியில் மதுவிற்ற அதே ஊரை சேர்ந்த பெத்துச்சாமி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.