செய்திகள்
சாமல்பட்டி அருகே அனுமதியின்றி விற்ற 40 மதுபாட்டில்கள் பறிமுதல்
சாமல்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி விற்ற 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் நேற்று குடிநீர் தொட்டி அருகே மொபட்டில் அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தார்.
இதுகுறித்து சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விதுன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது போலீசார் வருவதை கண்டு சுதாகர் மொபட்டை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மொபட்டையும், அதில் இருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.