செய்திகள்
திருச்செங்கோட்டில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை
திருச்செங்கோட்டில் விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கீழேரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த வீட்டில் சிவக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கந்தசாமி திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.