செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 137 பேர் கைது

Published On 2021-04-05 11:13 GMT   |   Update On 2021-04-05 11:13 GMT
ராமநாதபுரம் அருகே மது விற்ற 137 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்நத பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 137 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News