செய்திகள்
கைது

பர்கூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-24 17:29 GMT   |   Update On 2021-11-24 17:29 GMT
பர்கூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

பர்கூர் போலீசார் கோடியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று கல்லாவி போலீசார் வைரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (66) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News