கார்
மாருதி சுசுகி செலரியோ

முன்பதிவில் நல்ல வரவேற்பை பெறும் மாருதி சுசுகி செலரியோ

Published On 2021-12-12 04:45 GMT   |   Update On 2021-12-11 11:01 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை செலரியோ மாடலின் விற்பனை கடந்த மாதம் துவங்கியது. இதுவரை புதிய செலரியோ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.

இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் இரு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த காரை வாங்க முன்பதிவு செய்பவர்கள் குறைந்தபட்சம் 12 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021-இல் மட்டும் மாருதி சுசுகியின் உற்பத்தி 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது மாருதி சுசுகி கார்களுக்கான காத்திருப்பு காலம் 9 முதல் 12 வாரங்கள் வரை இருக்கிறது. சி.என்.ஜி. மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 17 முதல் 18 வாரங்கள் வரை இருக்கிறது.
Tags:    

Similar News