செய்திகள்
கொள்ளை

கந்தம்பாளையம் அருகே பெருமாள் கோவிலில் கோபுர கலசம் திருட்டு

Published On 2020-09-16 10:30 GMT   |   Update On 2020-09-16 10:30 GMT
கந்தம்பாளையம் அருகே பெருமாள் கோவிலில் கோபுர கலசம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் வந்த மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் கோபுர கலசத்தை திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று காலை பூஜைகள் நடத்துவதற்காக கோவிலுக்கு வந்த குருக்கள் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோபுர கலசம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கோவில் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News