செய்திகள்
கோப்பு படம்

சேரன்மகாதேவி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி

Published On 2019-11-19 12:01 GMT   |   Update On 2019-11-19 12:01 GMT
சேரன்மகாதேவி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் சாலை தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மகன் முருகேசன் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். முருகேசன் அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பணியை முடித்துவிட்டு தென்காசியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சில் வந்துள்ளார். பஸ் கூனியூர் பேருந்து நிலையத்தில் நிற்பதற்கு முன்பே முருகேசன் கீழே இறங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News