ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்பு பூஜை

Published On 2021-11-06 07:04 GMT   |   Update On 2021-11-06 07:04 GMT
ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
பிரசித்திப் பெற்ற கேதார்நாத் சிவன் கோவிலில் ஆதிசங்கரர் ஜீவசமாதியும், அதன் மீது அவரின் உருவச்சிலையும் இருந்தது. அது, இயற்கை சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டது. கேதார் நாத்தில் புதிதாக ஆதி சங்கரர் ஜீவசமாதியும், அவரின் உருவச்சிலையும் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மன் கோவில் அருகில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது மடாதிபதிகள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதொடர்பாக நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு காணொலி காட்சி மூலம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஒளி பரப்பப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News