லைஃப்ஸ்டைல்
அலுவலகத்தில் தொல்லை தரும் சகபணியாளர்களை சமாளிப்பது எப்படி?

அலுவலகத்தில் தொல்லை தரும் சகபணியாளர்களை சமாளிப்பது எப்படி?

Published On 2021-03-15 03:21 GMT   |   Update On 2021-03-15 03:21 GMT
தொல்லை தரும் சகப்பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றனர். ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்.
தொல்லை தரும் சகப்பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றனர்.அவர்களைத் தவிர்த்து விட்டு, அவர்களாகவே விலகி செல்வார்கள் என்று நம்புவது பயனளிக்காது. பாதிக்கப்பட்ட பணியாளர் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு, சகப்பணியாளர்களை சமாளிப்பது எப்படி? என்று தெரிந்து கொள்வதே பலனளிக்கும். எல்லா நிறுவனங்களிலும் இதுபோன்ற ஆட்கள் இருப்பார்கள் என்பதை மறக்காதீர்கள். இப்போது நீங்கள் சமாளிக்க வேண்டிய வாய்ப்புள்ள பல்வேறு வகையான தொல்லை தரும் சகப் பணியாளர்களைப் பற்றி காணலாம்.

தாங்களாக செய்து முடிக்காத பல்வேறு வேலைகளுக்காக பெயரும் புகழும் வாங்கி கொள்வதற்காக எந்த வெட்கமும் அடைய மாட்டார்கள். “அவர்களுடைய தந்திரங்களை கண்டறிவதில் புத்திசாலித்தனமாக இருந்திடுங்கள். எடுத்துக்காட்டாக, அதுபோன்றவர்களுக்கு தரப்படும் ஒரு வேலையின் பெரும் பகுதியை நீங்கள் செய்து வந்தால் அதற்காக ஆச்சர்யமடையாதீர்கள். ஆனால் சகப்பணியாளர் பிரசண்டேஷன் நேரத்தில் மட்டும் திடீரென்று தோன்றி எல்லாவற்றையும் தான் செய்ததாகக் காட்டிக் கொண்டு பெயரைத் தட்டிச் செல்வார்.

தந்திரங்களும், ஈகோ நிறைந்த பேச்சுவார்த்தைகளும் அடிக்கடி செய்யும் இதுபோன்றவர்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களை தோற்கடிக்க முயற்சி செய்வார்கள். குறிப்பாக அவர்களுடைய யோசனைகளை அல்லது பரிந்துரைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தாத நேரத்தில். இதுபோன்றவர் உங்களுக்கு மேல் அதிகாரம் நிறைந்தவராக இருந்தால், அவருடைய பயமுறுத்தும் விடாப் பிடியான நடவடிக்கைகள் உங்கள் மன அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும்.

தொல்லை தருபவர்கள் பொதுவாக நீங்கள் எதிர்க்கும் போது விலகி ஓட முயற்சி செய்வார்கள்.அலுவலகத்தில் உங்களுக்குத் தொல்லை தருபவருக்கும் உங்களுக்கும் இடையே உணர்வு பூர்வ இடைவெளியை உருவாக்கும் வழிகளை கண்டறிந்து விட்டால், உங்களுக்கு குறைவான பாதிப்புகள் ஏற்பட வழி வகுக்கும். விஷயம் என்னவென்றால், உங்கள் இடைவெளியை பராமரித்து, அசட்டையுடன் சமாளித்தாலே போதுமானது என்பதே.

புரளி பேசுபவர்கள் ஆபத்தானவர்கள், எந்தவொரு நிறுவனத்திலும் உங்கள் வேலையை அதிக சிக்கலாக மாற்றி விடக் கூடியவர்கள். உங்களைப் பற்றி உங்கள் மேலாளர்களிடம் வேறொருவர் தவறாக பேச அனுமதிக்கக் கூடாது. “உங்கள் மேலாளர்களிடம் உங்களைப் பற்றி தவறாக கூறப்பட்டுள்ளதா என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அறிகுறிகளைத் தேடுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்களுடைய எதிர்வினை உங்களிடம் திடீரென்று இறுக்கமாக மாறி விட்டதா என்று பாருங்கள். அப்படி என்றால், அவர்களிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனை என்று கேளுங்கள். நேரடியான பேச்சுவார்த்தையில், பல விஷயங்கள் சரியாக வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீது உருவாக்கப்பட்ட கெட்டபெயரையும் சரிசெய்ய முடியும்.”
Tags:    

Similar News