ஆன்மிகம்
கொட்டாரம் ராமர்

கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 2 நாட்கள் நடக்கிறது

Published On 2021-01-11 06:45 GMT   |   Update On 2021-01-11 06:45 GMT
கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா 2 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கொட்டாரம் நந்தவனத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

சட்ட ஆலோசகர் அசோகன் தலைமை தாங்குகிறார். செயற்குழு உறுப்பினர்கள் மணி, ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். உப தலைவர் ராஜகோபாலாச்சாரி வரவேற்று பேசுகிறார். அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ரேணுகா ராமச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறார். முடிவில் செயற்குழு உறுப்பினர் ஆனந்த விஜயன் நன்றி கூறுகிறார்.

இரவு 8.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-வது நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, தொடர்ந்து கலச பூஜை, பஜனை நடக்கிறது. பஜனையை கொட்டாரம் ஸ்ரீராமர் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார்.

9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி ஸ்ரீ மணியா இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி தாளாளர் கோபாலகிருஷ்ணன், தொழில்அதிபர் தேசிக சங்கர், விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், டாக்டர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் நந்தவனம் ஸ்ரீ ராமர் திருக்கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News