செய்திகள்
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள திருடிச் சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜிபுரம் நடராஜன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28). கடந்த 28-ந்தேதியன்று சீனிவாசன் இடதுகால் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தனது தாயாருடன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 850 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து சீனிவாசன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.