ஆன்மிகம்
அம்மாப்பேட்டை பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மாப்பேட்டை சின்னக் கடைத் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோவில், புத்தூர் புற்றிடம் கொண்டீஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அம்மாப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி மாத சஷ்டி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி அம்மாப்பேட்டை சின்னக் கடைத் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோவில், புத்தூர் புற்றிடம் கொண்டீஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையொட்டி சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.