செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-01 13:11 GMT   |   Update On 2020-12-01 13:11 GMT
ராமநாதபுரம் அருகே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பாலிசிதாரர்கள், முகவர்கள், ஊழியர்கள் கலந்துகொண்ட மதிய உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லிகாய் முகவர் சங்க தலைவர் கணபதி தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. ஊழியர்கள், முகவர்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்க ராமநாதபுரம் கிளை செயலாளர் முத்துப்பாண்டி பேசினார். முடிவில் கிளை தலைவர் பிரேமா கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.
Tags:    

Similar News