லைஃப்ஸ்டைல்
வீடுகளை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள இதோ சில வழிமுறைகள்..

வீடுகளை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள இதோ சில வழிமுறைகள்..

Published On 2019-10-25 03:17 GMT   |   Update On 2019-10-25 03:17 GMT
வீடுகளை சுத்தமாகவும் உயிரோட்டமாகவும் வைத்துக் கொள்வது என்பது அவரவர் கைகளில்தான் உள்ளது. வீடுகளை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இனி பார்க்கலாம் வாங்க...
வீடுகளை சுத்தமாகவும் உயிரோட்டமாகவும் வைத்துக் கொள்வது என்பது அவரவர் கைகளில்தான் உள்ளது. உங்க வீட்டுக்குள்ளே நுழைந்தாலே மிகவும், புத்துணர்ச்சியாகவும் குதூகலமாகவும் இருக்கிறது என்று நம்மிடம் சிலர் சொல்வதையோ அல்லது நாம் சிலரிடம் சொல்வதையோ நம்மால் மறுக்க முடியாது.

வீடுகளை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இனி பார்க்கலாம் வாங்க...

சன்னல்கள் என்பவை ஒவ்வொரு வீட்டின் கண்கள் என்று சொல்லலாம். சன்னல்களுக்கு அணிவிக்கப்படும் நவநாகரீக திரைச்சீலைகளே வெளியுலகத்திற்கு நம்மைப் பற்றிய நல்ல எண்ணத்தைக் கூறும் என்றும் சொல்லலாம். நல்ல இழை மங்களம், வெனிடியன் பிளைன்ட்ஸ் அல்லது மேனர் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுத்து சன்னல்களுக்குப் போடலாம்

திரைச்சீலைகள் மட்டுமல்லாது தரைகளில் விரிக்கப்படும் விரிப்புகள், கம்பளங்களும் வீட்டின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையும். வீடுகளில் போடப்படும் விலை உயர்ந்த சோபாக்கள் மற்றும் ஊஞ்சல்களுடன் தரையில் விரிக்கப்படும் கம்பளங்கள் இருந்தால் மட்டுமே அவை அந்த வீட்டின் அலங்காரத்தை முழுமையாக்குகிறது என்று சொல்லலாம். தரைக் கம்பளத்தைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அறையின் அளவு, வண்ணம், அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது.

பிளெயின் மெத்தைகள் அல்லது திவான்களின் மீது கூடுதல் குஷன்களை வேறு வேறு நிலைகளில் இடம் மாற்றி வைத்து சோர்வான தோற்றத்தை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளலாம்.

நம் வீடுளில் பல தலைமுறைகளாக இருக்கும் சோபா அல்லது நாற்காலிகளை அப்புறப்படுத்தாமல் அவற்றை நம் ரசனைக்கு ஏற்றாற்போல் புதுப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் பழைய பொருள் புதிய தோற்றத்தில் கம்பீரமாக நம் வீடுகளை அலங்கரிக்கும்.

கட்டில் மெத்தைகள் என்று எடுத்துக் கொண்டால் பல வீடுகளில் அவற்றின் மீது வீட்டுப் பொருள் மொத்தத்தையும் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். அதுபோன்று பொருள்களை மெத்தைகளின் மீது வைக்காமல் அலமாரிகளில் வைத்துப் பழகுங்கள். அவரவர் உபயோகியுங்கள். கட்டில்களின் கீழே தரையில் அழகான மிதியடிகளை உபயோகிக்கும் பொழுது அவை படுக்கை அறையின் அழகை உயர்த்தும் விதமாக இருக்கும்.

தலையணைகளுக்கு பெரிய பிரிண்டுகள், பூக்கள் மற்றும் ஜயா மெடிரிக் வடிவ உறைகளை உபயோகிக்கலாம். ஒவ்வொரு முறை உறைகளை மாற்றும் பொழுதும் வேறு வேறு வித்தியாசமான டிசைன்களில் வந்திருப்பவற்றை உபயோகியுங்கள். ஒரே நிறம் மற்றும் டிசைன்களின் அதிக எண்ணிக்கையில் உறைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றையே மறுபடி மறுபடி உபயோகிக்கும் பொழுது ஒருவிதமான சோர்வான உணர்வை அவை ஏற்படுத்தி விடும்.

படுக்கை அறைகளில் கட்டடிலுக்கு அருகிலிருக்கும் சிறிய மேசைகளில், மங்கலான வெளிச்சம் தரும் மேசை விளக்குகள் இருப்பது அறைக்கு நிசப்தத்தையும் இனிமையையும் தருவதாக இருக்கும்.



வரவேற்பு அறைகளின் ஓரங்களின் பசுமை நிறைந்த செடிகளை வைக்கலாம். செடிகளின் வளர்ச்சியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் கவனிக்கும் பொழுது நம்முள் ஏற்படும் இனம்புரியாத சந்தோசத்தை உணர மட்டுமே முடியும்.

அதேபோல் லிவிங் ரூம்களில் இசைக் கருவிகள் மற்றும் இசை சம்பந்தப்பட்ட குறுந்தகடுகள், நமக்கு விருப்பப்பட்ட புத்தகங்களையும் நேர்த்தியாகவும், அலங்காரமாகவும் அடுக்கி வைக்கலாம்.

அறையில் பெரிய அளவிலான கண்ணாடிகளை சுவர்களில் மாட்டும் பொழுது அவை அறையைப் பெரியதாகக் காட்டுகின்றன. இதுபோன்ற கண்ணாடிகளுக்குக் கீழே சிறிய டேபிள்களை வைத்து அவற்றின் மீது பீங்கான் பூந்தொட்டிகளை வைத்து அலங்கரிப்பதும், அந்தக் கண்ணாடியில் பூந்தொட்டியின் பிம்பத்தைக் காணும் பொழுது அவை வீட்டிற்கு ஒரு கிளாசிக் தோற்றத்தை தருவதை உணர முடியும்.

சுவரை அலங்கரிக்கும் ஒரே பெரிய ஓவியத்தை மாட்டலாம் அல்லது சிறுசிறு ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை கற்பனைத் திறத்துடன் சுவாரசியம் தரும் வகையில் சுவற்றில் அலங்கரிக்கலாம். வெறுமையான சுவர்கள் சோம்பலான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும்.

அறைக்கு ஒளியூட்டும் விளக்குகளையும் அலங்காரமானதாக மாற்றலாம். மின்சார விளக்குகளின் ஒளியானது அறைக்கு கூடுதல் அழகைத்தரும். ஒரு வீட்டினுள் நுழையும் பொழுதே பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருந்தால் நம்மை அறியாமலேயே புத்துணர்ச்சியானது நம்முள் ஏற்பட்டு விடும்.

அறைகளின் சுவர்களை அலங்கரிக்க வால் பேப்பர்கள் ஒட்டுவதும், மார்பிள் பேப்பர்கள் ஒட்டுவதும் அல்லது வித்தியாசமான பிரிண்டுகள் மற்றும் சுவர் ஓவியங்களை வரைவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது. இவையும் வீடுகளுக்குக் கூடுதல் அழகைத் தரும்.

இன்னும் சில வீடுகளில் அழகிய பெரிய அளவிலான மீன்தொட்டிகளை வைத்திருப்பதை பார்க்க முடியும். வண்ண வண்ண மீன்கள் தொட்டிகளில் நீந்திப் பாய்வதை பார்க்கும் பொழுது தம்முடைய மன அழுத்தம் என்பது நிச்சயம் குறைந்து விடும். மேற்கூறிய அனைத்தையும் சுத்தமாக வைத்துப் பராமரிக்கும் பொழுது வீடுகள் என்பது அழகாகவும், உயிரோட்டம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Tags:    

Similar News