ஆன்மிகம்
கெங்கையம்மன்

கே.வி.குப்பம் அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் கோவில் திருவிழா

Published On 2021-08-09 07:30 GMT   |   Update On 2021-08-09 07:30 GMT
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், இரவு வாண வேடிக்கை ஆகியவை நடந்தது.
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பெருமாள் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், இரவு வாண வேடிக்கை ஆகியவை நடந்தது. போலீசார் மேற்பார்வையில் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மேல்காவலூர் கிராமவாசிகள், விழா குழுவினருடன் சேர்ந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News