செய்திகள்
சரத்குமார்

ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம்- சரத்குமார் பேச்சு

Published On 2021-02-03 10:14 GMT   |   Update On 2021-02-03 10:14 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம் என பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது மக்களுக்கு தான் பாதகம். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கேட்காதீர்கள், வாங்காதீர்கள்.

அனைத்து சமுதாய மக்களையும் சமத்துவமாக பார்ப்பது, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மட்டுமே. இன்று வரை அ.தி.மு.க. கூட்டணியுடன் தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம். அதன் பிறகு தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆனால் நிச்சயமாக தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News