உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கம்

தண்ணீர் சேமிப்பு கருத்தரங்கம்

Published On 2022-05-05 10:16 GMT   |   Update On 2022-05-05 10:16 GMT
இளையான்குடி கல்லூரியில் தண்ணீர் சேமிப்பு கருத்தரங்கம் நடந்தது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம். இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான்  திட்டத்தின் படி,  கல்லூரி உன்னத் பாரத் அபியான்,  வேதியியல் துறை இணைந்து தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. 

கல்லூரி உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பா ளர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வர வேற்றார். கல்லூரி செயலர்   ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி, ஒருங்கி ணைப்பாளர்  முஸ்தாக் அஹமதுகான், வேதியியல்துறைத்தலைவர்  செய்யது அபுதாஹிர் ஆகியோர் பேசினர். 

மாணவ-மாணவியர் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பல்தவேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் மாணவ -மாணவியர் கலந்து கொண்டனர். 

வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்ப ட்டன. இந்த நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு பொரு ளாளர் மற்றும் தலைவர் (பொறுப்பு)  அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்  அபூபக்கர் சித்திக், வேதியியல்துறை இணைப்பேராசிரியர்  ஜபருல்லாகான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர்  ஷபினுல்லாகான் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 

உன்னத் பாரத் அபியான், இணை ஒருங்கிணைப்பாளர்  ஜெயமுருகன் நன்றி கூறி னார். நிகழ்வினை வேதியியல்துறை உதவிப்பேராசிரியை  அப்ரோஸ், ர்சனா பர்வீன் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.

Tags:    

Similar News