செய்திகள்
மது விற்பனை

கடந்த ஆண்டைவிட ரூ.23½ கோடி சரிவு - மது வகை விலை உயர்வே விற்பனை குறைந்ததற்கு காரணம்

Published On 2021-11-06 07:18 GMT   |   Update On 2021-11-06 09:43 GMT
தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10 முதல் ரூ.500 வரை சமீபகாலமாக உயர்த்தி உள்ளனர்.

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.23 கோடியே 66 லட்சம் குறைவாகும்.

இது பற்றி மதுக்கடை விற்பனையாளர்கள் கூறியாவது:-

நிறைய மதுக்கடைகளில் இந்த முறை மக்கள் முண்டியடித்து மது வாங்கும் அளவுக்கு அதிக கூட்டம் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லாததுதான்.


தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை (எலைட் ஷாப்) ரூ.10 முதல் ரூ.500 வரை சமீபகாலமாக உயர்த்தி உள்ளனர்.

குறிப்பாக ஜானிவாக்கர், பெய்லி ஐரீஷ், ஜெ.பி.விஸ்கி உள்ளிட்ட மது வகைகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இதன் விற்பனை குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் மது விற்பனை குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்...பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்

Tags:    

Similar News