செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2021-10-08 10:49 GMT   |   Update On 2021-10-08 10:49 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). கட்டிட தொழிலாளி. நேற்று இரவு பைக்கில் கள்ளூர் ஜெமினி நகர் அருகே வந்தபோது அங்கே ஒரு வீட்டின் அருகே பைக்கை நிறுத்தி அங்கிருந்த இரும்பு ஷெட்டின் கம்பியின் மீது சாய்ந்துள்ளார்.

அந்த ஷெட்டில் உள்ள இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த ஷெட்டின் கம்பியை பிடித்த கார்த்திக் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கார்த்தியை மீட்க முயன்ற போது கார்த்தியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது.

இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News