செய்திகள்
பிங்க் பந்து பகல் இரவு ஆட்டம்

கொல்கத்தா பகல்-இரவு போட்டி தொடங்கும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Published On 2019-11-12 14:40 GMT   |   Update On 2019-11-12 14:40 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முன்னதாகவே போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது.

பொதுவாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் பனியில் பந்து ஈரமாகிவிட்டால், பந்து வீச்சாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

பொதுவாக பகல்-இரவு போட்டி மதியம் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு தாக்கம் அதிகமாக இருக்கு என்பதால் போட்டியை ஒரு மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது.

இதை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதால் கொல்கத்தா டெஸ்ட் போட்டி நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியின் முதல் செசன் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி 3 மணிவரை நடக்கும். பின்னர் 40 நிமிட இடைவேளைக்குப் பிறகு 3.40 மணிக்கு தொடங்கி 5.40 வரை நடக்கும். அதன்பின் 20 நிமிட இடைவேளைக்குப்பின் 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News