செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மொபட் மீது கார் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி அருகே மொபட் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, வீரப்பன் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவர் அதே பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று அவர்மொபட்டில் தண்டேகுப்பம் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முதியவர் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.