செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் சிறுமிக்கு டெங்கு

Published On 2021-11-27 08:25 GMT   |   Update On 2021-11-27 08:25 GMT
கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கே.பி.சி நகர் பகுதியை  சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

இதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்தனர். அப்போது அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெங்கு பரவுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News