செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்?

Published On 2018-07-01 07:24 GMT   |   Update On 2018-07-01 09:18 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி 15-ந் தேதி அடிக்கல் நாட்டுவார் என தகவல் வெளியாகி உள்ளன. #AIIMS #AIIMSinMadurai #PMModi

சென்னை:

மதுரை தோப்பூரில் மத்திய அரசு உயர்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை நிறுவுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதற்காக தோப்பூரில் 200 ஏக்கல் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக கட்டப்படுகிறது.

தென்னிந்தியாவில் முதலாவதாக அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் அடிக்கல் நாட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

 


 

அடிக்கல் நாட்டு விழாவை காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் பங்கேற்கும் தேதி விவரம் விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த விழாவின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை தனியாக சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News