செய்திகள்
மந்திரி சபை விரிவாக்கம் குறித்து 3 நாட்களில் முடிவு: எடியூரப்பா
மந்திரி சபை வரிவாக்கம் குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா உள்ளார். இவர் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் உடன் இணைந்து பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய முகத்திற்கு மந்திரி சபையில் இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில் ‘‘புதிய முகத்துடன் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து நட்டாவிடம் எதிர்த்து கூறினேன். அவர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இதுகுறித்து என்னிடம் ஆலோசிப்பதாக தெரிவித்தார்’’ என்றார்.
தற்போது கர்நாடக மாநில மந்திரி சபையில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர். இன்னும் 7 பேரை நியமிக்க இடம் உள்ளது.