செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் பி.பி.அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்த பாபு என்கிற கருப்பண்ணசாமி (வயது 48) என்பதும், அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.