செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதி

ஆரவாரமின்றி பிறக்கும் புத்தாண்டு- சென்னை மாநகரம் ஊரடங்கு போல காட்சியளிக்கும்

Published On 2020-12-31 09:28 GMT   |   Update On 2020-12-31 09:28 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் அனைத்து கடைகள், ஓட்டல்களை மூட உத்தரவிட்டு இருப்பதுடன் 10 மணிக்கு பிறகு தேவையில்லாத வாகன போக்குவரத்துக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது போல காட்சியளிக்கும். பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News