வழிபாடு
சாரநாதபெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாரநாதபெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-12 04:49 GMT   |   Update On 2022-01-12 04:49 GMT
19-ந் தேதி(புதன்கிழமை) நிலைத்தேரோட்டமும், 26-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு உற்சவ பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் அச்சிட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கொடிமரம் அருகே சாரநாயகிதாயாருடன் சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. 19-ந் தேதி(புதன்கிழமை) நிலைத்தேரோட்டமும், 26-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு உற்சவ பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News