ஆட்டோமொபைல்
இந்தியாவில் மீண்டும் விலையை மாற்றும் கவாசகி
கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது.
ஜப்பான் நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்கள் புதிய விலை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாகிறது.
மார்ச் 31, 2021 அல்லது அதற்கும் முன் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதைய விலையே பொருந்தும். அந்த வகையில், ஏப்ரல் 1, 2021 மற்றும் அதன் பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் புதிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
நின்ஜா 300 மற்றும் ZX-10R மாடல்கள் தவிர கவாசகி நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் விலலையும் உயர்த்தப்படுவதாக கவாசகி தெரிவித்து உள்ளது. மற்ற மாடல்களான KX, KLX மற்றும் Z H2 SE உள்ளிட்டவையும் தற்போதைய விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை.
விலை உயர்வுக்கான காரணத்தை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. கவாசகி மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன.