செய்திகள்
எடமணல் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன் வரவேற்று பேசினார், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளாராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆகியவை கண்டறியப்பட்டு அவற்றிற்கு மருந்துகள் வழங்கப்பட்டது, முகாமில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.