உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல்

Published On 2022-04-16 10:09 GMT   |   Update On 2022-04-16 10:09 GMT
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 21 ந் தேதி நடக்கிறது.
கரூர்:


கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 21 ந் தேதி தொடங்கி 26 ந் தேதி வரை நடக்கிறது என்று கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்-களுக்கான நேர்காணல் கரூர் அரசு கலை கல்லூரியில் வரும் 21-ந் தேதி முதல் வரும் 26 ந் தேதி வரை நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி முதல் நடைபெற உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்-பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்-பத்தில் குறிப்-பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்-பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் 

அனைத்து அசல் சன்றுகளுடன் கரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளவும், மேலும், நேர்முக அழைப்-பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை வலைதளத்திலிருந்து வரும் 20-ந் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News