செய்திகள்
விஷம்

நாங்குநேரி அருகே வி‌ஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை

Published On 2021-09-25 10:35 GMT   |   Update On 2021-09-25 10:35 GMT
நாங்குநேரி அருகே விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). இவர் காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

சம்பவத்தன்று குமரேசன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் குமரேசனை கண்டித்தனர். இதில் மனமுடைந்த குமரேசன் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு குமரேசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News