உள்ளூர் செய்திகள்
கோவையில் குப்பைக்கு வைத்த தீயால் விபரீதம்- 2 வயது குழந்தை பலி
குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். ஐ.டி. ஊழியர். இவரது மனைவி சுவாதி (வயது 28). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இவர்கள் ஆதிரன் என்ற பெயர் சூட்டி இருந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுவாதி தனது குழந்தையை கையில் வைத்தபடி வெளியே கொட்டியிருந்த குப்பைகளை மண்எண்ணை ஊற்றி எரித்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுவாதியின் துப்பட்டாவில் தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அவர் கையில் வைத்து இருந்த குழந்தை ஆதிரன் மற்றும் சுவாதி ஆகியோர் மீது தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயில் இருந்து குழந்தையையும், தாயையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயையும் , குழந்தை¬யும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 2 மாத ஆண் குழந்தை ஆதிரன் பரிதாபமாக இறந்தன. சுவாதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.